Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவை போல் ஈபிஎஸ்.. பிரிவினை பற்றி பேசாதீங்க.. மாஜி அமைச்சர் மாபா பாண்டியராஜன் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛ஜெயலலிதாவை போல் எடப்பாடி பழனிச்சாமியை மிகுந்த எழுச்சியோடு கட்சி தொண்டர்கள் வரவேற்கின்றனர்.இந்த வேளையில் பிரிவினை பற்றி பேச வேண்டாம்'' என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஜூன் மாதம் பூதாகரமாக வெடித்தது. ஜூன் மாதம் மத்தியில் இந்த விவகாரம் வெளிப்படையாக தெரியவந்தது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து உள்கட்சி மோதல் வெடித்து நீதிமன்றங்களை நாட தொடங்கினர். இதற்கிடையே தான் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக அலுவலகத்துக்கு சீல்

அதிமுக அலுவலகத்துக்கு சீல்

மேலும் அன்றைய தினம் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. மாறாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து பிரச்சனையை கருத்தில் கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு

எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு

இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்க உத்தரவிட்டது. மேலும் ஒருமாதம் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தான் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதன்மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் செல்லும் என்பது உறுதியானது.

 72 நாளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி

72 நாளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி

பொதுக்குழு வழக்கு, அதிமுக தலைமை அலுவலகம் வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்ற நிலையில் 72 நாட்களுக்குப் பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அவரது வருகையை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.

மாபா பாண்டியராஜன் பேட்டி

மாபா பாண்டியராஜன் பேட்டி


இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மிகுந்த எழுச்சியோடு கட்சி தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கின்றனர். கடந்த முறை பெங்களூரில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி வந்தபோது இருந்த எழுச்சியை இப்போது நான் பார்க்கிறேன். கட்சிக்கு இது நல்லகாலம். கட்சியில் அனைவரும் ஒன்றுப்பட்டு இருக்கக்கூடிய காலம் இது. இந்த வேளையில் பிரிவினை பற்றி பேசவேண்டாம்'' என கூறி சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+