ஜனநாயகத்தை படு கொலை செய்யும் மாநில தேர்தல் ஆணையம்..ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுகவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை காலதாமதம் இன்றி நடத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 மாதம் அவகாசம் கோரிய, தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல் கண்டனத்திற்குரியது. உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாததால் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும் சூழலில், உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதகள் இல்லை என்பது வேதனைக்குரியது. நீதிமன்றம் பலமுறை தேர்தலை நடத்த உத்தரவிட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமல் அலட்சியம் காட்டி பலமுறை கண்டனத்திற்குள்ளானது மாநில தேர்தல் ஆணையம்.
தற்போது மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் கோரியுள்ளது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். 2016 அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தலை தான், இன்னும் நடத்தாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016 அக்டோபர் 24ம் தேதி முதல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications