அப்பா கேள்வி கேட்க.. மகன் பதில் சொல்ல.. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் இன்டர்வியூவை பாருங்க!
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத் இன்று நேர்காணலில் கலந்து கொண்டார்.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இன்று நேர்காணலில் கலந்து கொண்டார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. அதிமுக போட்டியிட போகும் லோக்சபா தொகுதிகளில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
அதிமுகவில் தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கான நேர்காணல் நேற்றில் இருந்து நடந்து வருகிறது.

தாக்கல் செய்தார்
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார். ஆனால் இவர் எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இவர் அதிமுகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறார்.

யார் கேள்வி
இன்று காலை அதிமுக அலுவலகத்தில் இந்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. முதல்வர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள். இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்த நேர்காணலில் ரவீந்திரநாத் கலந்து கொண்டார்.

கேள்வி எழுப்பினார்
இந்த நிலையில் ரவீந்திரநாத் அதிமுக தரப்பில் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். அவர் போட்டியிட போகும் தொகுதி, அதன் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

எங்கு போட்டி
ரவீந்திரநாத் பெரும்பாலும் தேனி அல்லது அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த மனுக்கள் மீதான முடிவு நாளை எடுக்கப்படும். நாளை அதிமுக போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications