அட.. அறிவாலயம் இப்பவே கொண்டாட்டத்திற்கு ரெடியாய்ருச்சே.. மாஸ் ஏற்பாடுகளில் திமுக!
திமுக கட்சி தொண்டர்கள் இப்போதே சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்காரங்கள் செய்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: திமுக கட்சி தொண்டர்கள் இப்போதே சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்காரங்கள் செய்து வருகிறார்கள். தேர்தல் வெற்றியை கொண்டாட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இத்தனை நடைமுறைகளா? லோக்சபா தேர்தலில் வாக்குகள் எப்படி எண்ணப்படும்.. முழு விபரம்!
வாய்ப்பு
இந்தநிலையில் தமிழகத்தில் திமுகவிற்கே அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் பெரிய நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
|
அலங்காரம் செய்தனர்
இதையடுத்து தற்போது சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அறிவாலயத்தை திமுக தொண்டர்கள் அதிகாலையில் இருந்து அலங்காரம் செய்து வருகிறார்கள்.
வீடு
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் வீடு முன்பும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு முன்பும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்போதே அங்கு தொண்டர்கள் குவிய தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில்திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுக்க
சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க பல்வேறு திமுக அலுவலகங்களில் இதே போல் வெற்றியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களை வென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால் திமுகவினர் இப்போதே படு குஷியில் இருக்கிறார்கள்.