செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!
Recommended Video
சென்னை: அதிமுக ஆட்சியை தக்க வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய தியாகத்தை செய்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகிக் கொண்டு இருக்கிறது. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தமுறையும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மாறாக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.
நாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது?
தமிழகத்தில் எப்படி
ஆனால் தமிழகத்தில் அதிமுக மிக மோசமாக தோல்வியை லோக்சபா தேர்தலில் சந்திக்க இருக்கிறது. திமுக 36 இடங்களில் வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது. அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் என்ன
அதே சமயம் அதிமுக சட்டசபை இடைத்தேர்தலில் 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 22 தொகுதிகளில் நடந்த இடைதேர்தலில் 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 12 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. அமமுக எங்கும் முன்னிலை பெறவில்லை.
ஆட்சி
தமிழகத்தில் இதனால் அதிமுகவின் ஆட்சி காப்பாற்றப்பட்டுள்ளது. ஆம் அதிமுக இந்த இடைத்தேர்தலில் 5 இடங்களை வென்றால் ஆட்சியை தக்க வைத்து இருக்க முடியும். ஆனால் அதிமுக அதைவிட அதிகமாக 5 இடங்களை பெற்றுள்ளது. இதனால் அதிமுக ஆட்சிக்கு இனி எந்த பாதிப்பும் இல்லை.
தியாகம் செய்தாரா
ஆகவே தமிழக சட்டசபை தேர்தலுக்காக லோக்சபா தேர்தலில் அதிமுக தியாகம் செய்து இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தாமல், தமிழக சட்டசபை தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தி, எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை தக்க வைத்து இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.