தமிழ்நாடு, புதுவை: 40 தொகுதிகளையும் சுனாமி போல வாரி சுருட்டும் திமுக அணி: Democracy Times பரபர சர்வே
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையுமே திமுக கூட்டணி கைப்பற்றும் என்று Democracy Times கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல்களைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி ஆகியவை உறுதியாக களத்தில் நிற்கின்றன. இந்த கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள்தான் மாறி மாறி வலம் வர வாய்ப்புள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி தொடர்பான பெரும்பாலான லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட் இடங்களும் பாஜகவுக்கு அதிகபட்சமாக ஒரு தொகுதியும் கிடைக்கலாம் என்பதுதான் இக்கருத்து கணிப்பு முடிவுகள்.
Times Now- ETG Research நடத்திய கருத்து கணிப்பில், திமுக கூட்டணி- 30 முதல் 34 இடங்கள்; திமுக 20 முதல் 24 இடங்கள்; காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்; அதிமுக 4 முதல் 8 இடங்கள்; பாஜக 0 முதல் 1 என தெரிவித்திருந்தது. இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் (India TV-CNX) கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 28 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வரிசையில் தற்போது Democracy Times லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையுமே திமுக தலைமையிலான கூட்டணிதான் அள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணிக்கு 48% வாக்குகளும் அதிமுக கூட்டணிக்கு 23% வாக்குகளும் கிடைக்குமாம். பாஜகவுக்கு 7% வாக்குகள் கிடைக்கும் என்கிறது Democracy Times கருத்து கணிப்பு.












Click it and Unblock the Notifications