புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள்… காரணம் என்ன ?
சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், புழக்கத்தில் 2,000 நோட்டுக்கள் மறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரமான ஏடிஎம்-மில் பணம் எடுத்தாலும் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன என்றும், 2,000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புதிய 2,000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்த போது சில்லறை கிடைக்காமல் வியாபாரிகளும், மக்களும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். அதன்பின் 500 ரூபாய் நோட்டு வந்ததும், சில்லரை தட்டுப்பாடு சற்று குறைந்தது.
தேர்தலுக்காக 2,000 ரூபாய் நோட்டுகளை சில முக்கிய கட்சிகள் பதுக்கி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகத் தான் புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுக்கள் திடீரென மாயமாகி உள்ளதாக வங்கி ஊழியர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக புதிய 2,000 நோட்டுக்கள் கொண்டு வரப்பட்ட போதிலும், தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் இருந்து மறைந்திருப்பது பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் திருவிழாவின் போது வெளிவராத 2,000 நோட்டுக்கள், இனி எப்போது வெளியாகும் என்பது கேள்விகுறியே என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications