Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் - புதுச்சேரியில் 1,500 வேட்புமனுக்கள் தாக்கல்… இன்று பரிசீலனை

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2 ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, நடைபெற உள்ளது.

தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் 6 நாட்களில் 1,500 க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்

Loksabha elections 2019: Review on nominations Today

கடைசி நாளான நேற்று அமமுக கட்சியினர் உட்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 39 மக்களவைத் தொகுதிகளில் ஆயிரத்து 569 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் 171 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

மேலும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 74 பெண்கள் உட்பட, 485 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை, 11:00 மணிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. வேட்பு மனுவை வாபஸ் பெற, 29ம் தேதி கடைசி நாளாகும்.

வரும் 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை 5 மணியளவில் 39 மக்களவைத் தொகுதி, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+