வலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்!
சென்னைக்கு அருகே தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: சென்னைக்கு அருகே தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தற்போது தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம்
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை எப்படி வலுப்பெற்று வருகிறது. காற்றின் சுழற்சி எப்படி இருக்கிறது என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.

ஆந்திரா
சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு அருகேதான் இந்திய பெருங்கடலில்தான் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் காற்று அதிகமாக வீசும். ஆனால் காற்றின் திசையை பொறுத்தே சென்னையில் மழை பெய்யுமா, பெய்யாதா என்பதை கணிக்க முடியும்.

கடல் சீற்றம்
சென்னையில் இந்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். நாள் முழுக்க வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் கண்டிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளனர்.

புகைப்படம்
சென்னையை போலவே கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காற்று வீசும் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளது. குமரியில் நாள் முழுக்க கடல் சீற்றத்துடன் காணப்படும்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications