பொங்கல் சிறப்பு ரயில்கள் ரத்து! சென்னை - கோவை ரூட் ரயில்கள்.. தெற்கு ரயில்வே அதிரடி முடிவு
சென்னை: வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது ரயில்வே. நாடு முழுவதும் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனால், பண்டிகை நாட்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், ஜனவரி 15ஆம் தேதி நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்தது தெற்கு ரயில்வே. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வரும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 19-ந்தேதி மாலை 3.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06011),
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 21-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06053),
சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு வரும் 19 ஆம்தேதி இரவு 11.25 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06033),
போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 21 ஆம் தேதி இரவு 12.35 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06024),
சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு 21 ஆம் தேதி மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (06023) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தலா 1 முறை மட்டுமே இயக்கப்பட இருந்தன. ஆனால் இந்த ரயில்களில் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. எனவே தெற்கு ரயில்வே இந்த ரயில்களை ரத்து செய்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications