எல்பிஜி கேஸ் சிலிண்டர் வைத்திருக்கிறீர்களா? சமையல் சிலிண்டரை இன்றே வாங்கிடுங்க.. நாளை தட்டுப்பாடு?
சென்னை: ''பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாளை அதாவது 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்'' என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பாட்டிலிங் நிலையங்களுக்கு, வீட்டு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு பல்க் LPG டேங்கர் லாரிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள் மூலம் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

நிபந்தனைகள் ஏற்க மறுப்பு
நடப்பாண்டு முதல் வரும் 2030ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன.. அதில், ஒரு சில நிபந்தனைகள் தங்களுக்கு ஏற்புடையவையாக இல்லை என்று லாரி உரிமையாளர்கள் அதிருப்தியும், ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், அவர்களது ஆட்சேபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில், டேங்கர் லாரிகள் போராட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "2025 - 2030ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் வலியுறுத்தியும்கூட, எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
நாளை முதல் காலவரையற்ற போராட்டம்
அவர்கள் வெளியிட்டிருந்தது பாதகமான அறிவிப்புகள்.. அதன்படி செயல்பட்டால், நாங்கள் நஷ்டமடைவோம்.. நஷ்டத்திற்காக லாரிகளை இயக்க முடியாது... மொத்தம் 10 இடங்களில் கேஸ் ஏற்றும் இடங்கள் உள்ளன. எனவே, நாளை முதல் அந்த இடங்களில் இருந்து லோடு ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும்...
காலமுறை வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக 4000 LPG டேங்கர் லாரிகள் இயங்காது. அதேபோல, இந்தியா முழுவதிலுமே இதே பிரச்சனைதான் என்பதால், மற்ற டேங்கர் லாரிகள் தரப்பிலும் போராட தயாராக உள்ளனர்" என்றார்.
கேஸ் தட்டுப்பாடு வந்துருமே
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதால், அன்றாடப் பயன்பாட்டில் மிக முக்கியமான கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகள், ஹோட்டல் உள்ளிட்டவை கேஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலைமையும் உருவாகியிருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, சிலிண்டர் பாட்டிலிங் நிலையங்களுக்கு கேஸ் கொண்டு செல்வது பாதிக்கப்படும்.. இதனால், சிலிண்டர் தட்டுப்பாடுகள் மேலும் ஏற்படலாம். இந்த நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே கேஸ் சிலிண்டரை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்












Click it and Unblock the Notifications