எல்பிஜி கேஸ் சிலிண்டருடன் ரூ.50 லட்சம் காப்பீடு.. எப்படி பெறுவது? யாருக்கெல்லாம் கிடைக்கும் பாருங்க
சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ரூ.50 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படுகிறது. எதற்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது? அதை எப்படி பெறுவது தெரியுமா?
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

காஸ் சிலிண்டர்: இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.. இதில் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள்.
காப்பீடுகள்: அதேபோல, சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது... அதாவது, சிலிண்டரில் கேஸ் லீக்கேஜ் மற்றும் சிலிண்டர் வெடிப்புகள் போன்றவை நடந்துவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கிடைக்கிறது.
இதற்காக காப்பீடு தொகை எதையும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருக்கின்றன.
எல்பிஜி சிலிண்டர்: அந்தவகையில், எல்பிஜி சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெறலாம்.. இந்த காப்பீடு விஷயத்தில், வாடிக்கையாளருக்கு என்ன உரிமைகள் உள்ளது? இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது..
- சிலிண்டர் வழங்கும் முன்பு டீலர் அதை முறையாக பரிசோதிக்க வேண்டும்
- வாடிக்கையாளரின் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் விபத்தால் சேதமடைந்தால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.
- விபத்து ஏற்பட்டால், 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும்.
- விபத்தில் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
- விபத்து நடந்து 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் தனது எல்பிஜி நிறுவனம் மற்றும் அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து தெரிவிக்க வேண்டும்.
- சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்க FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை ஆவணங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
- கேஸ் நிறுவனங்களே காப்பீடு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தேவையானவற்றைச் செய்து கொடுக்கும்.
- சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் போன்றவை அனைத்தும் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள நபர்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும்.
- சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நபர்களுக்கு மட்டுமே ரூபாய் 50 லட்சத்திற்கான காப்பீடு தொகை வழங்கப்படும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications