அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்; தமிழ் அர்ச்சனை.. வரலாற்று சாதனை படைத்த தமிழக அரசு- கவிஞர் வைரமுத்து
சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டுள்ளதும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதும் தமிழக அரசின் வரலாற்று சாதனைகள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் 75வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவிஞர் வைரமுத்து. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:
கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரம் என்ற கவிதை வாசகம் கத்தியின்றி ரத்தமின்றி பெறப்பட்டது அல்ல இந்தியாவின் சுதந்திரம். தேசிய கொடியின் கீழ் எத்தனை ரத்தம் சிந்தப்பட்டது, எத்தனை சடலங்கள் கிடந்தது, எத்தனை தியாகம் செய்யப்பட்டது என்பதை இந்தியர்கள் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

சுதந்திரத்துக்கான தியாகம்
தியாகம் இல்லாமல் சுதந்திரமில்லை; இந்தியர்கள் இதை நெஞ்சில் எழுதிக் கொள்வதுதான் நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் செய்தியாக இருக்கும். தமிழ்நாட்டின் வரலாற்றில் இரண்டு சாதனைகளை தமிழக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை
கடவுள் தமிழில் அர்ச்சனை செய்தால் புரிந்து கொள்ள மாட்டாரா...? இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுள் என்றால் தமிழ்மொழியையும் அவர்தானே படைத்திருக்க முடியும். அவர் படைத்த மொழியில் அர்ச்சனை செய்தால் ஒப்பாக இருக்காதா...!

தமிழ் மொழிக்கு அதிகாரம்
தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது தான் எங்களுக்கு புரிகிறது- கடவுளுக்கு புரிகிறதா என்பது இரண்டாம் பட்சம். முதலில் மனிதனுக்கு புரிகிறதா என்பது தான் பார்க்க வேண்டும். இது தமிழ் மொழிக்கு கிடைத்த உரிமை என்று சொல்வதைவிட தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம் என்று கூறுவேன். தமிழ் மொழியில் அர்ச்சனை என்ற திட்டத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணை வழங்கப்பட்ட போது கண்ணீரோடு கவனித்தேன் தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய உரிமை. வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. இவ்வாறு வைரமுத்து கூறினார்.
-
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications