நடிகர் மாரிமுத்து மறைவு.. "என் உடம்பு ஒரு கணம் ஆடி அடங்கியது" - கவிஞர் வைரமுத்து
சென்னை: இயக்குநரும் நடிகருமான 'எதிர்நீச்சல்' மாரிமுத்துவின் மரணம் தமிழ்நாட்டு ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவின் உதவியாளராக திரைத்துறையில் நுழைந்தார். நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள இரங்கல்:

தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
தம்பி மாரிமுத்துவின்
— வைரமுத்து (@Vairamuthu) September 8, 2023
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம்… pic.twitter.com/aEuWcCbOWF












Click it and Unblock the Notifications