Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்... வைரமுத்துவின் நாட்படு தேறல் 3வது முன்னோட்டம் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாடல் தொகுப்பின் 3-வது முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் பாடல்கள் திரிந்து போகலாம். ஆனால், தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை என்பது வைரமுத்து கருத்து.

Lyricist Vairamuthu tweets on 3rd Preview of 100 Songs Project Natpadu Theral

பாடல்கள் இல்லாத வாழ்வு ஓசையில்லாத உலகம் போன்றது; பறவைகள் இல்லாத காடு போன்றது. பாடல்கள் இனிமேல் திரைப்படங்களிலும் இருக்கலாம் அல்லது திரைக்கு வெளியிலும் இருக்கலாம் என்றும் வைரமுத்து கூறியிருந்தார்.

அத்துடன் 100 பாடல்கள்... 100 பாடகர்கள்.. 100 இசையமைப்பாளர்கள்.. 100 இயக்குநர்கள் என்ற திட்டத்துடன் நாட்படு தேறல் எனும் பாடல் தொகுப்பை வெளியிடுவதாகவும் வைரமுத்து அறிவித்திருந்தார். இதன் முன்னோட்டங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் வைரமுத்து.

இன்று நாட்படு தேறலின் 3-வது முன்னோட்டத்தை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில், நாக்கு செவந்தவரே நாலெழுத்து மந்திரியே என்ற பாடலுக்கு இசை அமைத்து பாடியிருக்கிறார் வாகு சமான். இதனை இயக்கி இருப்பவர் கிருத்திகா உதயநிதி என தெரிவித்துள்ளார் வைரமுத்து.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+