Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம்பட்டி ரங்கராஜூக்கு சம்மன் போச்சே? இன்று சென்னை போலீஸில் ஆஜராகி விளக்கம் தருவாரா? விடாத ஜாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் எனக்கு உறுதி தந்திருக்கிறார்கள்.. சட்டப்படியாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். ஆனால் என்னையே எல்லாரும் குற்றம்சாட்டுகிறார்கள்.. மாதம்பட்டி ரங்கராஜிடம் எதுவுமே கேட்பதில்லை என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கண்ணீருடன் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இன்றைய தினம் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸில் ஆஜராவார் என்று தெரிகிறது.

நடிகர், தயாரிப்பாளர், சமையல் கலை நிபுணர், டிவி செலிபிரிட்டி என்று நிறைய முகங்களை கொண்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். விஐபிகளின் வீடுகளின் சமையல் நிகழ்ச்சிகளுக்கு ஹெலிகாப்டரிலேயே சென்று பங்கேற்று வருபவர் என்றெல்லாம் கூறப்படுகிறது.

madhampatti rangaraj Joy crizildaa

7 மாத கர்ப்பம்

ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி தங்கராஜ், தன்னை திருமணம் செய்வதாக சொல்லி, இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும், இப்போது தான் 7 மாத கர்ப்பமாகவும், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பொதுவெளியிலேயே பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தந்தார். ஆனால், ஜாய் தந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லி, முதல்வர் ஸ்டாலினுக்கு தன்னுடைய சோஷியல் மீடியா பக்கம் கோரிக்கை வைத்தார். "நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஜாய் தந்த ஆதாரங்கள்

இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா 3 நாட்களுக்கு முன்பு ஆஜரானார். காலை 11 மணி முதல் 6 மணி நேரம் ஜாயிடம் விசாரணை நடத்தப்பட்டது..

அப்போது ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள்? திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் குறித்து 50க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை ஆரம்பமானது.. AI தொழில் நுட்பம் தற்போது கையாளப்படுவதால், திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கான தரவுகள் குறித்தும் துணை கமிஷனர் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்த ஆதாரங்களை ஜாய் சமர்ப்பித்திருந்தார்.

பாவம் சும்மா விடாது

இந்த விசாரணை முடிந்து வெளியே வந்த ஜாய், செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கும் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நீதி தேவை. இந்த பாவமெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜை சும்மா விடாது. என் குழந்தைக்காக எந்தவொரு உச்சத்துக்கும் சென்று நீதி கேட்பேன்.. நிச்சயம் போலீசார் இதில் நடவடிக்கை எடுப்பார்கள். எனக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது' என்று கூறியிருந்தார்.

ஜாயிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.. இதன்காரணமாக மாதம்பட்டிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே, தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் 26ம் தேதி ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜூக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.

இன்று நேரில் ஆஜராகுவாரா

ஏற்கனவே ஜாய் ஆஜரானபோது அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்த நிலையில், இன்றைய தினம் மாதம்பட்டி ரங்கராஜ் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் துணை ஆணையர் முன்பு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று நேரில் ஆஜராகும் மாதம்பட்டி ரங்கராஜிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதால், தன்னுடைய விளக்கத்தை போலீசில் தெரிவிப்பார் என்று நம்பப்படுகிறது.. எனவே இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+