Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரண்ட மாதவரம்.. வேணுகோபால் நகருக்கே போயாச்சு.. அசரடித்த "ஆனைமலை" சுரங்கப்பாதை.. சபாஷ் சென்னை மெட்ரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2-வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் மாதவரத்தில் கடந்த அக்டோபரில் அக்டோபரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகின்றன..

madhavaram to venugopal nagar work has finished in chennaimetro phase two

மாதவரம்: இந்த திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனிடையே, மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையமும் அமைக்க உள்ளார்கள்.. இந்த மயிலாப்பூர் நிலையமானது, 3-வது மற்றும் 4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும் என்றும், 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், 4 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

ஆனைமலை: 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.. ஆனைமலை என்றும் இந்த சுரங்கத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது..

இந்த ஆனை மலை சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரம் பால் பண்ணையில் இருந்து கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை துவங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரமானது, மாதவரம் பால்பண்ணையில் இருந்து 415 மீட்டர் தொலைவுக்கு தன் பணியை முடித்துள்ளது.. அதன்படி, வேணுகோபால் நகரையும் வெற்றிகரமாக எட்டிவிட்டது.

பால்பண்ணை: அதுபோலவே, சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவம் பால் பண்ணையில் கடந்த மே மாதம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது... 50 மீட்டர் சுரங்கப் பணியை முடித்து வரும் ஆகஸ்டு 25-ம் தேதி வேணுகோபால் நகரை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

madhavaram to venugopal nagar work has finished in chennaimetro phase two

இதுகுறித்து சென்னை மெட்ரே ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சொல்லும்போது, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணிகள் துரிதமாகி வருகின்றன. மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை சுரங்கம் தோண்டும் பணிக்கு பயன்படுத்த உள்ளோம். முதல் சுரங்க இயந்திரம் தன்னுடைய பணியை நிறைவு நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்ததாக, இந்த இயந்திரத்தை அயனாவரத்தில் பயன்படுத்த உள்ளோம்.

கனத்த நம்பிக்கை: இரண்டாம் மெட்ரோ திட்டத்தில், உயர்மட்ட ரயில் பாதைக்கான கட்டுமானபணிகள் 2024-ம் ஆண்டு முடிந்துவிடும். இதையடுத்து, எஞ்சியுள்ள பணிகளைமுடித்து 2025-ம் ஆண்டு இறுதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். வரும் 2027-ல் தொடக்கத்தில் அனைத்து உயர்மட்ட மெட்ரோ பணிகளும் முடிக்கப்பட்டு, 2028-ல் சுரங்கப்பாதையில் மொத்த பணிகளும் நிறைவு செய்யப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+