Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பரவும் மெட்ராஸ் ஐ.. பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை.. மா.சுப்ரமணியன் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ பரவி வருவதால் வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆகிய 10 நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஜ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கண்கள் சிவந்து எரிச்சலை ஏற்படுத்தும். கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் ஆகும்.

Madras eye spread in Chennai Eye check up for school students from 16th September says Minister Ma. Subramanian

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இந்த மெட்ராஸ் பாதிப்பால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் ஆகும்.

இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் மெட்ராஸ் ஐ பரவக்கூடும். சென்னையில் "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர்.

பள்ளி மாணவர்கள் பலரும் மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது .

குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தாலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

Madras eye spread in Chennai Eye check up for school students from 16th September says Minister Ma. Subramanian

மேலும், வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆகிய 10 நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதித்து பாதுகாக்கின்ற மகத்தான திட்டத்தை அரசு முன்னெடுத்து இருக்கிறது என்று தெரிவத்த அமைச்சர் மா. சுப்ரமணியன், வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு ஏதாவது ஒரு பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை தமிழ்நாடு முழுவதிலும் 3,702 பேர் கண் தானம் செய்துள்ளனர் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+