சென்னையில் பரவும் மெட்ராஸ் ஐ.. பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை.. மா.சுப்ரமணியன் உத்தரவு
சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ பரவி வருவதால் வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆகிய 10 நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஜ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கண்கள் சிவந்து எரிச்சலை ஏற்படுத்தும். கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் ஆகும்.

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ கண்நோய் ஆகும். இந்த மெட்ராஸ் பாதிப்பால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் ஆகும்.
இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினால் பிறருக்கும் மெட்ராஸ் ஐ பரவக்கூடும். சென்னையில் "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர்.
பள்ளி மாணவர்கள் பலரும் மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது .
குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தாலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

மேலும், வருகிற 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆகிய 10 நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளி மாணவர்களுக்கும் கண் பரிசோதித்து பாதுகாக்கின்ற மகத்தான திட்டத்தை அரசு முன்னெடுத்து இருக்கிறது என்று தெரிவத்த அமைச்சர் மா. சுப்ரமணியன், வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு ஏதாவது ஒரு பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை தமிழ்நாடு முழுவதிலும் 3,702 பேர் கண் தானம் செய்துள்ளனர் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications