Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதி​மன்​றம் தலை​யிடும் முன்​பாக, மெரினா கடற்​கரை முழு​மை​யாக கடைகளால் ஆக்​கிரமிக்​கப்​பட்டு சுத்​தமில்​லாமல் இருந்​தது. அந்த கடைகள் மாஃபியா கும்​பல்​களின் கட்​டுப்​பாட்​டில் இருந்து வந்தது. கடை உரிமை​யாளர்​களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்த கும்​பல் நீதி​மன்ற தலை​யீடு காரண​மாக பின்​புலத்​தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்​டி​விட்டிருப்பதாக நினைக்கிறோம். அதன் காரண​மாகவே இந்த மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளனவா என்ற சந்​தேகம் எங்களுக்கு உள்​ளது என நீதிபதிகள் கூறினார்கள்.

சென்னை மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகும். உலக புகழ் பெற்ற இந்த கடற்கரையில், முறையற்ற வகையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக கடற்கரையின் பொலிவு பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் கருதியது. இதையடுத்து சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள கடைகளை முறைப்​படுத்​து​வது தொடர்​பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

Madras HC Judges allege that the encroaching shops in Marina were under the control of mafias

உயர்நீதிமன்றம் உத்தரவு

அப்போது விசாரணையில் மெரினா கடற்கரையில் உள்ள கடைகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும், தள்ளுவண்டிக் கடைகளுக்குச் சீரான அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாரம்பரிய கடைகளுக்குப் பதிலாக, மாநகராட்சி மூலம் வடிவமைக்கப்பட்ட நவீன 'ஸ்மார்ட் தள்ளுவண்டிகளை' மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும் லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு மீன் கடைகளை அகற்றிவிட்டு, அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட மீன் சந்தை வளாகத்திற்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தான் மீன் மார்க்கெட் அடியோடு மாற்றப்பட்து.

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி

இதனிடையே வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா ஆகியோர் அடங்​கிய அமர்​வு, மெரினாவில் உணவுப் பொருட்​கள், பொம்மை மற்​றும் பேன்சி கடைகள் என மொத்​தம் 300 கடைகளுக்கு மட்​டுமே அனு​மதி வழங்க வேண்​டுமென்​றும், இதற்​கான பயனாளி​களை தேர்வு செய்ய ஜம்​மு-​காஷ்மீர் உயர் நீதி​மன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிப​தி​யான என்​.​பால்​வசந்​த கு​மாரை நியமித்​தும் உத்​தர​விட்​டிருந்தார்கள்.

300 கடைகள்

அதன்​படி 300 பேருக்கு மெரினாவில் கடைகள் ஒதுக்​கப்​பட்​டிருக்கிறது. இப்போது கடை வைத்திருப்பவர்கள் இனி வைக்க முடியாது.. மொத்தமே 300 தான் கடை வைக்க முடியும் என்று மாறப்போகிறது. இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மெரினாவில் ஏற்​கனவே கடைகளை வைத்​திருந்த 600-க்​கும் மேற்​பட்​டோர் இந்த வழக்​கில் தங்​களை​யும் இணைக்​கக்​கோரி இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்தார்கள்.

தாம்பரம் டூ செங்கல்பட்டில் சொந்த வீடு வாங்க போறீங்களா.. களிமண் நிலமா.. பில்டர்கள் சொல்லாத உண்மை
தாம்பரம் டூ செங்கல்பட்டில் சொந்த வீடு வாங்க போறீங்களா.. களிமண் நிலமா.. பில்டர்கள் சொல்லாத உண்மை

சுத்தமாக பராமரிக்க முடியாது

அந்த மனுக்​களை விசா​ரித்த நீதிப​தி​கள், "கடற்​கரைக்கு அரு​கில் உள்ள வியா​பார மண்​டலங்​களில் மட்​டுமே கடைகள் ஒதுக்​கப்பட வேண்​டும். மெரினாவை வியா​பாரத் தலமாக மாற்ற ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது. கேரளா​வின் கோவளம், ஒடி​சா​வின் பூரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்​கரைகளைப்​போல மெரினாவையும் அழகுபடுத்தி சுத்​த​மாக பராமரித்​தால் மட்​டுமே இந்​திய சுற்​றுலா பயணி​கள் மட்​டுமின்றி வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணி​களும் அதி​கள​வில் வருகை தருவார்கள்.

நீதிமன்ற தலையீடு

நீதி​மன்​றம் தலை​யிடும் முன்​பாக, மெரினா கடற்​கரை முழு​மை​யாக கடைகளால் ஆக்​கிரமிக்​கப்​பட்டு சுத்​தமில்​லாமல் இருந்​தது. அந்த கடைகள் மாஃபியா கும்​பல்​களின் கட்​டுப்​பாட்​டில் இருந்து வந்தது. கடை உரிமை​யாளர்​களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்த கும்​பல் நீதி​மன்ற தலை​யீடு காரண​மாக பின்​புலத்​தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்​டி​விட்டிருப்பதாக நினைக்கிறோம். அதன் காரண​மாகவே இந்த மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளனவா என்ற சந்​தேகம் எங்களுக்கு உள்​ளது. தற்​போது கடைகள் பெற்​றுள்ள 300 பேரும், யாருக்​கும், எதற்​காக​வும் பணம் கொடுக்​காமல் நேர்​மை​யான முறை​யில் கடைகளைப் பெற்​றிருக்கிறார்கள்.

சொந்த வீடு வாங்க விரும்பும் தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. சத்தமே இல்லாமல் சூப்பர் மாற்றம்
சொந்த வீடு வாங்க விரும்பும் தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. சத்தமே இல்லாமல் சூப்பர் மாற்றம்

மெரினா கடற்​கரை வியாபாரத் தலம் இல்லை

கடைகளை முறைப்​படுத்​தும் நீதி​மன்ற நடவடிக்​கைகளுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தால் அழகான மெரினாவை எதிர்​காலச் சந்​த​தி​யினருக்கு விட்​டுச்​செல்ல முடி​யாது. மெரினா கடற்​கரை ஒன்​றும் வியா​பாரத் தலம் அல்ல. அங்கு கடைகள் அமைப்​பதை யாரும் உரிமை​யாக கோர முடி​யாது. அதி​காரி​களு​டன் இணைந்து நாங்​கள் நேரடி கள ஆய்வு செய்​ததன் அடிப்​படை​யில் நீலக்​கொடி மண்​டலங்​களு​டன் சர்​வ​தேச அந்​தஸ்​துக்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. அதற்கு ஒரு​போதும் இடையூறு செய்​யக் கூடாது. இந்த இடை​யீட்டு மனுக்​கள் மீது பின்​னர் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்​" இவ்வாறு கூறிய நீதிபதிகள், வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+