பொய் புகாரில் போக்சோ வழக்கு.. 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: பொய்யான புகாரில், கோவையை சேர்ந்த நபருக்கு போக்சோ நீதிமன்றம் விதித்த 10 வருட சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் மகளை காதலிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது தொடர்பான சில புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் தன் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அளித்த புகாரில் குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், குமாருக்கு 10 வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையபெருமாள் ஆஜராகி, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் மூத்த சகோதரியை, குமார் காதலித்து வந்ததாகவும், பின்னர் வேறு ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க பேசப்பட்டது.
இந்த திருமணத்திற்கு குமார் இடையூறாக இருப்பார் என கருதி தங்கையை வைத்து பொய்யாக பாலியல் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதற்காக ஆதாரங்கள் இல்லை என மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, போக்சோ சட்டத்தின் கீழ் குமார் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதோடு, அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அவர் செலுத்தி இருந்தால் அந்த தொகைகளை மீண்டும் திரும்ப அவருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications