ஆகமத்தில் யார் தேர்ச்சி பெற்றாலும் அர்ச்சகர்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: ஆகமம், பூஜைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2018-ம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கான புதிய அர்ச்சகர்களை நியமிப்பது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட இந்த அறிவிப்பில், அர்ச்சகர் ஆவதற்கு ஆகம விதிகள் படித்து இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கில், கோவில்களுக்கான ஆகம விதிகள் தெரிந்திருந்தாலே போதும். கோவில்களில் அர்ச்சகராக முடியும் என தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆகமம் மற்றும் பூஜைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும் என அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்றுள்ள விசிக எம்பி ரவிக்குமார் கூறியிருப்பதாவது: அர்ச்சகர் நியமனம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.
N.Adithayan Vs. Travancore Devaswom Board என்ற வழக்கில் 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "as long any one well versed and properly trained and qualified to perform the puja in a manner conducive and appropriate to the worship of the particular deity, is appointed as Santhikaran dehors his pedigree based on caste, no valid or legally justifiable grievance can be made in a Court of Law" எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதை மேற்கோள் காட்டியிருக்கும் நீதிபதி
அர்ச்சகர் நியமனம் சாதியின் அடிப்படையில் செய்யப்படுவதல்ல என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் நியமனங்களைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் எம்பி கூறியுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications