பொன்முடிக்கு நிம்மதி.. பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. வழக்கை முடித்து வைத்த சென்னை ஹைகோர்ட்
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கினை முடித்து வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பதாகவும், பொறுப்பான பதவியில் இருக்கும் பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சைவம், வைணவம் சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து இருந்தது. இந்த வழக்கை முதலில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் புகார்தாரர்கள் அனைவரிடமும் இதற்கான ஒப்புகை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில் உயர் பதவியில் இருக்கும் பொன்முடி இதுபோன்ற கருத்துக்கள் பேசுவதை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும் கூறினார். மேலும், காவல்துறை இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதேபோல் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications