இந்து மக்கள் கட்சி பேரணிக்கு அனுமதி இல்லை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் பேரணியோ, ஊர்வலமோ செல்ல அனுமதி இல்லை; சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உள்அரங்கில் மாநாடு நடத்தலாம் என சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு எதிராக இந்து மக்கள் கட்சி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15 ஆம் தேதி, 'தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு' சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகிப்பார் என்றும், அன்று மாலை 3 மணிக்கு, ஆன்மிகப் பேரணியும், 4 மணிக்கு, பொதுக்கூட்டமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Hindu Makkal Katchi

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்து மக்கள் கட்சியின் பேரணி, மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் பேரணியோ, ஊர்வலமோ செல்ல அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்அரங்கில் மாநாடு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+