பாட்டில் தண்ணீர் குடிப்பவரா நீங்க? லேபிளில் 'அந்த' எச்சரிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: குடிநீர் பாட்டில்களிலும், உப்பு, சர்க்கரை பாக்கெட்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அது குறித்து எச்சரிக்கை வாசகங்களை லேபிளில் இடம் பெற செய்ய வேண்டும் என FSSAI-க்கு (உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நுண்ணிய பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து ஒரு இடைக்கால ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
நுண்ணிய பிளாஸ்டிக்குகள் என்பவை சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் என்றும், அவை பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிஸ்பெனால் ஏ (BPA) உட்பட பல ரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான அறிக்கையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வு தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கெனவே வழிகாட்டும் விதிகளை வகுத்துள்ளோம்.
பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து லக்னோ, கொச்சி, பிலானி ஆகிய இடங்களில் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கர்நாடகா உள்பட 6 மாநிலங்களில் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்தோம்.
அப்போது அதில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்தது. அது போல் பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தும். தினந்தோறும் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற செய்ய வேண்டும் என குடிநீர் பாட்டிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அப்போது ஆய்வுகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் எச்சரிக்கை வாசகங்களை இடம் பெற செய்தால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படும் என FSSAI தெரிவித்தது. இதையடுத்து ஆய்வுகளை விரைந்து முடிக்குமாறும் அதுவரை எச்சரிக்கை வாசகங்கள் சிவப்பு நிறத்தில், 10 அளவு எழுத்துருவில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம், குடிநீர் பாட்டில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ஏற்று, மத்திய அமைச்சகமும் FSSAI-யும் நான்கு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், பெட் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் குடிநீர், உப்பு, சர்க்கரை விற்கும் அனைத்து நிறுவனங்களும் புதிய லேபிளிங் விதிகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட வேண்டும். ஏப்ரல் 10, 2026-க்குள், FSSAI இது குறித்த ஒரு நிலை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிடப்பட்டனர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications