Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா, ஹிஜாவு மோசடி.. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? தமிழக அரசுக்கு பறந்த அதிரடி "ஆர்டர்"

"இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த அரசாங்கம் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை. மேலும், இந்த நிதி நிறுவனங்களுக்கு தனியார் வங்கிகளும் உடந்தையாக இருக்கின்றன"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்என்எஸ் உட்பட பல நிதி நிறுவனங்கள், கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்களை விளம்பரப்படுத்தின. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான பணத்தை இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர். ஆனால் இந்த நிதி நிறுவனங்கள் மக்கள் பணத்தை மோசடி செய்தன. இதுதொடர்பான புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 Madras High Court directs Tamil Nadu Government to file a report on the action taken on Aarudhra and Hijau

இந்நிலையில், திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்என்எஸ் உட்பட பல நிதி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 15 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளன. இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த அரசாங்கம் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை. மேலும், இந்த நிதி நிறுவனங்களுக்கு தனியார் வங்கிகளும் உடந்தையாக இருக்கின்றன. எனவேதான், முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை இவர்களிடம் முதலீடு செய்கின்றனர்.

இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்த நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு, தங்களது பணத்தை திரும்ப பெற முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். எனவே, முதலீட்டாளர்களிடம் தங்களது பணத்தை இழந்தது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கபட வேண்டும். மேலும், மக்களை ஏமாற்றிய முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் ரமேஷ் லட்சுமிபதி கோரியிருந்தார்.

இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு குறித்து விரிவான மனுவை தாக்கல் செய்யும்படி மனுதாரர் தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+