வைகாசி அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தாரா? அப்படி ஆதாரமே இல்லையே: உயர்நீதிமன்றம்
சென்னை: திருவள்ளுவர், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ் மாதம் தை 2 ம் தேதி திருவள்ளுவர் தினமாக, விடுமுறை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை செல்லாது என அறிவித்து, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சாமி தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், கடந்த 1935 ம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாகவும், 600 ஆண்டுகள் முன் மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோவிலில், வைகாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தை 2ம் தேதி திருவள்ளுவரை போற்றும் வகையில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறதே தவிர, திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கவில்லை எனவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் பிறந்தநாள் எது என அறுதியிட்டு கூற எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை அவரது பிறந்தநாளாக அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவில், மனித குலத்துக்கு 1,330 குறள்களில் வாழ்வியல் முறையை வகுத்தளித்த திருவள்ளுவரின் பிறந்தநாளை கண்டுபிடிக்க நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியதாகவும், ஆனால் அவரது பிறந்தநாள் குறித்த தீர்க்கமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தை மாதம் 2ம் தேதியை திருவள்ளுவர் தினமாக அறிவித்த உத்தரவில் எந்த இடத்திலும், அது அவரது பிறந்தநாள் என குறிப்பிடவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் சார்ந்துள்ள அமைப்பு வைகாசி மாதம் அனுச நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக கொண்டாட எந்த தடையும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications