இந்து அறநிலைய துறைக்கு எதிராக 20 நாட்கள் போராட அனுமதி கேட்ட விவசாயிகள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: இந்து அறநிலைய துறையை கண்டித்து விவசாயிகள் 2 நாட்கள் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் சார்பில், தொடர்ந்து 20 நாட்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், இரண்டு நாட்கள் அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
விவசாயிகள் சார்பில், தொடர்ந்து 20 நாட்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், பல்வேறு காலகட்டத்தில் விவசாயிகளுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களாக கூறி அவற்றை அரசு வகை மாற்றம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து அறநிலைய துறை, வக்ஃப் வாரியத்திடம் வகைமாற்றம் செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தானாக பெற்ற விவசாய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க கோரியும், விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை மாற்றி கோவில், மற்றும் வக்ஃப் வாரியங்களுக்கான நிலம் என வகைமாற்றி விவசாயிகளிடம் வாடகை வசூலிக்கும் அறநிலையத்துறை, வக்ஃப் வாரியத்தை கண்டித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், 20 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என்றும் 2 நாட்கள் போராட்டத்திற்கு அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.
2 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாய சங்கம் காவல்துறைக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அதை சென்னை காவல்துறை உரிய பரிசீலினைகளை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications