விபத்து தொடர்பான போலீஸ் விசாரணையில் நீதிபதியின் தலையீடு! வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விபத்து தொடர்பான காவல்துறையின் விசாரணையில் நீதிபதியின் தலையீடு இருப்பதால், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த சேகர், கார்த்திகேயன், சாந்த மூர்த்தி உள்ளிட்டோர், தங்கள் உறவினரின் இறப்புக்கு சென்று ஊர் திரும்பிய போது கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் மோதி அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டது.

court Chennai high court

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி செய்வதற்காக சாலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர், தான் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் கணவர் எனக்கூறி வண்டியை அப்புறப்படுத்தமாறு மிரட்டியுள்ளார்.

பின்னர் தகாத வார்த்தைகளால் திட்டியும், சாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தியும் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர், நீதிபதியின் கணவரிடம் பிரச்சனை செய்ததாக கூறி திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து சென்று காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி காவல்துறை தங்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தது

அதேவேளையில் தங்களுடைய புகார் மனு மீது எந்த விசாரணையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே காவல்துறையின் விசாரணையில் திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கமலா அவர்களின் தலையீடு இருப்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு விசாரணைக்கு மாற்றக் கோரி திண்டிவனத்தை சேர்ந்த சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+