AIIMS: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியவில்லை.. ஒரே போடாக போட்ட மத்திய அரசு.. அப்போ திறப்பு ?
சென்னை: பிரதமர் மோடி வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். மோடியின் இந்த பயணத்தின் போது எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டுமான பணிகளில்தான் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
ரூ.2,021 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த மருத்துவமனையின் 5 ஆண்டுகளுக்கு பின், 2024ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக மருத்துவக்கல்லூரி, நர்சிங் கல்லூரி, நிர்வாக அலுவலகம், மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்பட 13 லட்சம் சதுர அடியில் 13 கட்டிடங்களும்,
2-வது கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் கலையரங்கம், குடியிருப்புகள், மருத்துவமனை இயக்குனர் பங்களா, ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்பட 16 கட்டிடங்கள் என மொத்தம் 29 கட்டிடங்களுடன் இந்த வளாகம் அமைகிறது.
மோடி திறந்து வைக்கிறாரா?
2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டினாலும் 2024 ஆம் ஆண்டுதான் இதன் கட்டுமான பணிகள் தொடங்கின. 5 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் கூட தொடங்காமல் இருந்த நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்தன.
அதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கப்படவில்லை என்பதை வைத்து மிகப்பெரிய பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் மேற்கொண்டனர். இதற்கிடையே வருகிற மார்ச் 1 ஆம்தேதி மதுரையில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைப்பார் என்று தகவல் பரவியது.
கட்டுமான பணிகளில்தான் உள்ளது
7 ஆண்டுகளாக பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் சூழலில் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக வெளியான தகவல் முக்கியத்துவம் பெற்று இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கல் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தாமதம் ஆகிவருவதை விமர்சித்தார்.
இந்த சூழலில் தான் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த மருத்துவமனை திறக்கப்படலாம் என்று வெளியான தகவல் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை கட்டுமான பணிகளில்தான் உள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த தகவலினை மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செயல்பாடுகள் மற்றும் அதன் நிலை குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியில் உள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போரா, ஹரியானாவில் உள்ள ரேவரியில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையும் கட்டுமான பணியில்தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடியின் மதுரை பயணத்தின் போது எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்கப்படும் என்று பரவிய தகவலில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அனுமந்த ராவ் வெளியிட்ட அறிக்கையிலும், இதை உறுதிப்படுத்தியிருந்தார். அனுமந்த ராவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி தனது மதுரை பயணத்தின் போது திறந்து வைப்பதாக வெளியாகி உள்ள தகவல் உண்மை இல்லை.
ஜூன் மாதம்
திட்டமிட்டபடி பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கட்டிடங்களுக்கான பாதாள சாக்கடை மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு போன்றவற்றுக்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரத்தில் படித்து வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 4-ம் ஆண்டு மாணவர்களை மதுரைக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளோம். அவர்களுக்கு வகுப்பறைகள், விடுதிகள் தயாராகி வருகின்றன. ஜூன் மாதம் புறநோயாளிகள் பிரிவு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications