மகளிர் உரிமைத்தொகை: மெசேஜ் வந்தும் அக்கவுண்டில் பணம் ஏறலயா.. இதை பண்ணுங்க.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த மெசேஜ் வந்தும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என பரவலாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இது தொடர்பாக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த பிறகு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கியது.

எனினும் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் அளிக்கும் உரிமைத்தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கடந்த 2023- 24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த 1.6 கோடி குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாளே இல்லத்தரசிகளின் வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டது. இதனால், இல்லத்தரசிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு 18 ஆம் தேதி முதல் மேசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் வரும் 18 ஆம் தேதி முதல் இ சேவை மூலமாக மேல் முறையீடு செய்யலாம் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இதனிடையே, மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக மெசேஜ் வந்தும், வங்கி கணக்கில் பணம் வரவு ஆகவில்லை என்று பரவலாக புகார் எழுந்ததாக தெரிகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, பணம் கிரெடிட் ஆகாதவர்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் பணம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டோர் 18 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இ சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications