மகளிர் உரிமைத் தொகை.. இனி "இவர்களுக்கு" மட்டும் ரூ.1000? அரசு திட்டம், வரிப்பணம் குறித்து அதிமுக நச்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இந்த விரிவாக்கம், "யாரும் தவற விடப்படக் கூடாது" என்ற நோக்கில் அரசு எடுத்து வரும் இன்னொரு முக்கியமான சமூகநல நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது... இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. எனினும், அனைவருக்குமே இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அதிமுக சில முக்கிய கேள்விகளை தற்போது எழுப்பி உள்ளது.
குடும்பச் செலவுகளுக்கு உதவும் இந்த மாதாந்திர நிதி உதவி, பெண்களின் பொருளாதார சுயநிலையை உறுதி செய்யும் முக்கியத் திட்டமாக பார்க்கப்படுகிறது....

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்
அதுமட்டுமல்ல, இந்த திட்டம் தற்போது விரிவாக்கப்பட உள்ளது. ஆரம்ப கட்டத்தில் பல காரணங்களால் விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள், காலக்கெடுவை தவறவிட்ட பெண்கள் ஆகியோரை உள்ளடக்குவதே இந்த விரிவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், இதுவரை பயன்பெறாத அதிகமான பெண்களை சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் முக்கிய அம்சமாக, வருவாய் குறைவான பின்னணி கொண்ட ஓய்வூதியதாரர் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது... இதனால், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் போன்ற உதவிகளை மட்டும் நம்பி வாழும் பெண்களுக்கு, இந்த உரிமைத் தொகை கூடுதல் ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
பெண்கள் வாக்கு வங்கி
மொத்தத்தில் இந்த உதவித்தொகையானது, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும் திட்டமாக திகழ்ந்து வருகிறது.. இது திமுக அரசுக்கு பெண்களின் மத்தியில் மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை பெற்று தந்துள்ளது..
ஆனால், இந்த திட்டத்தை கொண்டு வந்ததில் இருந்தே எதிர்க்கட்சிகள் பலவிதமான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.. தகுதி அடிப்படையில் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்குமே இந்த உரிமைத்தொகை சென்றடைய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு
இப்படிப்பட்ட சூழலில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் உரிமைத்தொகை திட்டம் குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக பிரத்யேக அறிக்கையையும் இன்று வெளியிட்டுள்ளார்..
அந்த அறிக்கையில், "இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்களுக்கு மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனநாயக இலக்கணம் - மக்களின் வரிப்பணம்
அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம்.. மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை தி.மு.க. அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார்
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், தி.மு.க.வின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார்.
தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கே
இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது.
இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்..
-
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications