மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய்.. இதுவரை வாங்கவே இல்லையா? விரைவில் வெளியாகப் போகும் குட் நியூஸ்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ அவ்வளவு பேருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வு குறித்த அறிவிப்பும், விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் மாதம் தோறும் தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதில் மிக முக்கிய வாக்குறுதியாக இது பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை என்று அழைக்கப்படும் இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது.

1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவற்றை ஆய்வு செய்ததில் 70 சதவீதம் அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. முதல்வர் மு.க ஸ்டாலின் இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். விடுபட்டவர்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படது.
அதன்படி கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்பட்டது. இப்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 ஆக அதிகரித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகையை பெற அரசு நிர்ணையித்து இருந்த தகுதிகள் இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக பெண்கள் சிலர் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக எம்எல்ஏக்களிடமும், அமைச்சர்களிடமும் முறையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், நடந்து முடிந்த சட்டசபை தொடரின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ அவ்வளவு பேருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வு குறித்த அறிவிப்பும் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் எனவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் விடுபட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதால் பயனாளிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இடையே, மகளிர் உரிமை தொகைத் திட்டத்தில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. பிற மாநிலங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவி இதை விட கூடுதலாக உள்ளது. எடுத்துக்காட்டாக கர்நாடாகவில் 1,500 வழங்கப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டிலும் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் 2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து.. எதிர்க்கட்சிகள் வழங்க போகும் வாக்குறுதிகளை மனதில் வைத்து ஆளும் திமுக அரசு தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications