எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது.. குடும்ப தலைவிகள் எல்லாருக்கும் ரூ.1000 கொடுங்க.. எடப்பாடி
சென்னை: எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை பொம்மை முதல்வருக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த 1 கோடி குடும்ப தலைவிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது. ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகையினை வழங்காமல் காலம் தாழ்த்தியது விடியா திமுக அரசு. தற்போது குறிப்பிட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதன் நோக்கம் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற பெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மகளிர் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைப்பது திமுக அரசின் நப்பாசை எண்ணம். மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை உயர்த்தியதால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ. 10 ஆயிரம் வரை செலவு கூடியுள்ளது. தமிழகத்தில் பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்குவது ஏமாற்று வேலை.
தமிழகத்தில் பாதி தாய்மார்களுக்கும்மேல் பட்டை நாமம் போட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக விடியா திமுக அரசின் முதல்வர் மு.க ஸ்டாலின் வாய் பந்தல் போட்டுள்ளார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications