ஒரு கோடி பெண்கள்.. ஸ்டாலின் வழங்கிய மெகா பொறுப்பு.. உதயநிதி எதிர்கொள்ள போகும் சவால்கள்!
சென்னை: ஒரு கோடி பெண்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கே முக்கியமான திட்டத்தை அடுத்த 2 மாதங்களில் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பை சிக்கல் இல்லாமல் உதயநிதி நிறைவேற்றினால் அது நாடாளுமன்ற தேர்தலிலும், அதன் பின்னர் வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல.

ஏனெனில் திட்டம் முழுமையாக ஏழை எளிய பெண்களுக்கு போய் சேர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, கலைஞர் டிவி வழங்கிய போது, ஏழைகளுக்கு மட்டும் தான் இந்த டிவி என்று கட்டுப்பாடு விதிக்கவில்லை. காரணம் இதில் அரசியல் செய்து, ஏதாவது ஒரு வகையில் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் அப்படி அறிவிக்கவில்லை.
ஆனால் ஸ்டாலினோ அப்படி இல்லை. ஏழைகளுக்கு மட்டுமே 1000 ரூபாய் போய் சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஏனெனில் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் தருவது என்பது பொருளாதார ரீதியாக சிக்கலான விஷயம். எனவே பொருளாதார கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் ஏழை பெண்கள் ஒவ்வொருவரையும் தேர்வு செய்து அவர்களுக்கு 1000 தர அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் இந்தியாவில் எங்குமேஇல்லாத முன்னோடி திட்டம். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எப்படி செயல்படுத்த போகிறது என்பதை மற்ற மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த சூழலில் தான் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலிலினிடம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.
நேரடியாக மாவட்ட ஆட்சி தலைவர்கள் தான் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய போகிறார்கள். இதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், அதேநேரம் ஏழைகள் யாரும் விடுபடாமல் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில்
தமிழ்நாடு அரசினுடைய நிர்வாக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாடு வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை .
இதிலும் நிச்சயம் அரசியலும் உருவாகும். ஏழையான என் பெயர் வரவில்லை.. உன் பெயர் வரவில்லை என்று போர்க்கொடி உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது. அவர் என்னைவிட வருமானம் அதிகம் உள்ளவர், அவருக்கு கிடைக்குது .. எனக்கு கிடைக்கவில்லை என்று குரல்களும் வரும். ஆனால் அதை சரியாக கையாண்டு வெற்றிகரமாக திட்டத்தை நிறைவேற்றினால், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய பலமாக இருக்கும். சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு பெரிய பலமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இதனிடையே இந்த திட்டம் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' என்ற உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவையாக இருந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ, முதல்-அமைச்சர் அலுவலகத்தையோ, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ள அமைச்சர் உதயநிதியையோ அல்லது என்னையோ கூட எந்த நேரமானாலும் தொடர்புகொள்ளுங்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை. அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications