மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் தீவிரமாக பரவும் கொரோனா.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: மகாராஷ்டிராவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்த வருடத்திலேயே இல்லாத அளவிற்கு மிக அதிக கேஸ்கள் மஹாராஷ்டிராவில் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு மொத்தம் 11,305,979 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 158326 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10,947,252 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,57,584 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,37,353 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12381 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,57,602 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,40,723 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12535பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,83,531 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,43,473 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4343 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,82,841 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7179 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்திலேயே இதுதான் மகாராஷ்ராவில் பதிவான அதிக கேஸ் ஆகும். அங்கு மொத்தம் 22,66,374 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 21,06,400 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 52667 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications