லோக்சபாவில் போட்டியிட வாய்ப்பில்லை.. ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைக்கவில்லை.. மைத்ரேயன் அதிருப்தி
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜ்யசபா எம்பியாகவாவது தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். அதுவும் கிடைக்கவில்லை. இது மன வருத்தம் அளிக்கிறது என மாநிலங்களவை முன்னாள் எம்பி மைத்ரேயன் தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டனர்.
இவர்களது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தம் 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகம்மது ஜான், பாமகவின் அன்புமணியும், திமுக சார்பில் வில்சன், சண்முகம், வைகோவும் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உரை
இந்த நிலையில் நேற்றைய தினம் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து பதவி நிறைவடைந்தவர்கள் உரையாற்றினர். அப்போது மைத்ரேயனும் உரையாற்றினார்.

நிறைவேற்ற வேண்டாம்
அவர் ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசும் போது அழுதார். இந்த நிலையில் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்காத இந்த அவை, நான் உயிரிழந்தால் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என தெரிவித்தார்.

போட்டியிட வாய்ப்பில்லை
தொடர்ந்து 3 முறை மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட மைத்ரேயன், சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தென் சென்னை மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தேன். ஆனால் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

வருத்தம்
மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்தப்படி அந்த எம்பி பதவியும் கிடைக்கவில்லை. அதிமுக சார்பில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

இரட்டை தலைமை
ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமையில் சாதகமும், பாதகமும் உண்டு. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது நல்ல முறையில் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என மைத்ரேயன் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications