பொதுச் செயலாளர் யார்? அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார் மைத்ரேயன்! நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் மைத்ரேயன் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா இருந்த வரை அவரே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்தார். அவர் மறைந்தவுடன் அந்த பதவியை பொதுக் குழு கூட்டி சசிகலாவுக்கு தாரை வார்த்தனர் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள். அவரும் வேறு வழியில்லாமல் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிரிந்தது, சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அதிமுக ஒருங்கிணைந்தது என அனைத்தும் மக்கள் அறிவர். இதையடுத்து சசிகலாவிடம் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பறிக்க பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது.

சசிகலா
இதையடுத்து சசிகலா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதால் அவர் இல்லாத நிலையில் அந்த பதவி நீக்கப்பட்டது. அந்த பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன.

அதிமுக
இதையடுத்து அதிமுக, ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என்ற இரட்டை தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவருக்கிடையே அதிகார போட்டி நிலவுவதாலும் அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்வி அடைவதாலும் ஒற்றை தலைமை என்ற முழக்கங்கள் அதிகரித்துள்ளன.

பொதுச் செயலாளர்
அதிமுக பொதுச் செயலாளராக ஒருவரை தேர்வு செய்யலாமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.

மாவட்டச் செயலாளர் கூட்டம்
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் அல்லது ஒற்றை தலைமை, அதிமுகவின் அவைத் தலைவர் உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

மைத்ரேயன் வெளியேறினார்
இங்கு பேசப்படும் முக்கிய தகவல்கள் வெளியே சென்றுவிடாமல் இருக்க மாவட்டச் செயலாளர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு மைத்ரேயன் சென்றார். அப்போது அவரிடம் அங்கிருந்தவர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார்கள். இதனால் கோபமடைந்த மைத்ரேயன் கூட்டத்தில் பங்கேற்காமலேயே வெளியே வந்துவிட்டார். அண்மைக்காலமாக மைத்ரேயன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.
-
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
"தவெக உடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை”.. பட்டென சொன்ன எடப்பாடி பழனிசாமி -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி












Click it and Unblock the Notifications