Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமை செயலாளர் இறையன்பு போட்ட புது உத்தரவு.. அதிகாரிகளுக்கு பறந்த வந்த "கண்டிஷன்"..!

தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது.. இந்த பட்ஜெட் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் பிடிஆர் தன்னுடைய பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.. முன்னதாக, திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்.

 முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

பட்ஜெட் துவங்கும் முன்பு, அக்கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும், மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை எவ்வாறு சட்டப்பேரவையில் பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம்.. சென்ற முறையும் இப்படித்தான் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

 மரபுகள்

மரபுகள்

ஒவ்வொரு துறை சார்ந்த கேள்விகளை, சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பினால், அதற்கான தரவுகளை கையில் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.. அவை மரபுகளை மதித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி தர வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.. அதனால்தான் கடந்த முறை கூட்டத்தொடர் மிகவும் அரசியல் நாகரீகத்துடன் இருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர்களே புகழ்ந்தனர்.

 கேள்விகள்

கேள்விகள்

இந்த முறை கண்டிப்பாக, பட்ஜெட் கூட்டத்தொடரில், காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு கேள்விகள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி, அரசிடம் இருந்து பதில் கோர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.. எனினும், திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமே இத்தகைய பொறுப்பு இல்லாமல், அதிகாரிகளுக்கும் சட்டசபையில் பொறுப்புகள் உள்ளது..

 சென்னை

சென்னை

அதனால்தான், அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றும், துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.. அந்த சுற்றறிக்கையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்காக மார்ச் 18 (இன்று) சட்டமன்றம் கூடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் இருப்பு அவசியம்.

 கட்டுப்பாடு

கட்டுப்பாடு

எனவே, நீங்கள் தலைமையகத்தில் இருக்குமாறும், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைத் தலைவர்களுக்கு நீங்கள் இதே போன்ற அறிவுறுத்தல்களை வழங்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... இதையடுத்து, அனைத்து அதிகாரிகளும் அலர்ட் ஆகி உள்ளனர்.. தங்கள் துறைசார்ந்த விவரங்களையும் கையில் எடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+