Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஃபுல் பவர்".. உங்களை நம்பி தான் ஒப்படைத்துள்ளேன்.. கலெக்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.. இதில், உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும், போதை பொருள் விற்பனை, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் எனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி என்று திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், போதைப்பொருள் புழக்கத்தையும் விமர்சித்தே வருகின்றன.

திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கிளர்ச்சியை தடுக்க முடியவில்லை, போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிமுக குற்றச்சாட்டுகளை கூறியதுடன், திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.

அன்புமணி

அன்புமணி

அதேபோல, தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அதிகரித்துவிட்டன, கஞ்சா, மாத்திரை, ஊசி போன்ற போதைப்பொருட்கள் மாணவர்களிடம் அதிகமாக புழங்குகிறது என்று குற்றஞ்சாட்டியும், தமிழகத்தில் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தியும் பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது... போதைப்பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தைக்கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அன்றைய தினம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றும் விடுத்திருந்தார்.

லெட்டர் எழுதிய ஸ்டாலின்

லெட்டர் எழுதிய ஸ்டாலின்

இந்நிலையில்தான், போதைப்பொருளை முற்றிலுமாக தடுக்கும் கடிவாளத்தை கையில் எடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.. மேலும் ஆகஸ்ட் 11-ம் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர்களுக்கு முதல்வர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.. மேலும், போதைப்பொருள் கடத்தலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை தயவுதாட்சண்யம் பாராமல் கைது செய்ய வேண்டும் என்று போதைபொருள் தடுப்பு விவகாரத்தில் டிஜிபிக்கு முழு சுதந்திரம் தந்து உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

இதையடுத்து, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு களமிறங்கினார்.. போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கலை தடுத்து நிறுத்தும் வகையில், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சிறப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.. இதன்மூலம் கஞ்சா கடத்தப்படுவதை தடுத்தும், கடத்தியவர்களை உடனுக்குடன் கைது செய்தும் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்...

திருச்சி திமுக

திருச்சி திமுக

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை சோதனையிலும் காவல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் கஞ்சா கடத்தலும், கஞ்சா விற்பனை செய்வதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. நேற்று முன்தினம்கூட, 2 கிலோ கஞ்சாவை திமுக பிரமுகரே காரில் வைத்து கடத்தி பிடிபட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

கலந்தாய்வு

கலந்தாய்வு


இந்நிலையில்தான், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அத்துடன் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக, அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கு பெறும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மேஜர் அறிவிப்பு

மேஜர் அறிவிப்பு

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு முதல்வர் தலைமையில் இக்கூட்டம் துவங்கியது.. தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல்கள் உள்ளிட்டவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.. அப்போது மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் சில உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

 ஒப்படைத்துள்ளேன்

ஒப்படைத்துள்ளேன்

முதல்வர் பேசும்போது, "போதை என்பது தனி மனித பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை.. போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும்.. போதைப்பழக்கம்தான் பல்வேறு குற்றங்களுக்கும் காரணமாக உள்ளது .. உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும், போதை பொருள் விற்பனை, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் எனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+