பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரித்த வைகோ… கருப்புக் கொடி காட்டுவது உறுதி
Recommended Video

சென்னை : கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர், கன்னியாகுமரிக்கு வரும் 1-ஆம் தேதி வரவிருக்கும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்.

மேலும், பிரதமர் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி தவிர வேறு அரசு நிகழ்ச்சிக்கு தமிழகம் வந்தால், கருப்பு கொடி காட்ட இருப்பதாக கூறினார்.
முன்னதாக, கருப்புக் கொடி காட்டும் போராட்டம் வைகோ கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விடுத்த கோரிக்கை குறித்த கேள்விக்கு, பொன். ராதாகிருஷ்ணன் பழகுவதற்கு இனிமையானவர் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில், வைகோ நடத்தும் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் வெத்து போராட்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications