எல்லாமே கபட நாடகம்.. நிச்சயம் தொங்கு சட்டசபை அமையும்.. மக்கள் நீதி மய்யம்
சென்னை: கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திணிப்புகளே என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது: கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கருத்து திணிப்புகளே. இதற்கு முன் வெளியான கணிப்புகள் அனைத்தும் தவறானவை என்பதை நாம் அறிவோம்.
திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளை மட்டுமே மாபெரும் சக்திகளாக கட்டமைக்கின்றனர். மகுடிக்கு கட்டுப்பட்டு ஆடும் பாம்பை போல இரு கழகங்கள் வாரி வழங்கும் பணத்திற்கு கட்டுப்பட்டு நடத்தப்படும் கபட நாடகம்.

அதிர்வலைகள்
இதில் பல நிறுவனங்களின் சதித் திட்டமும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நடுநிலை ஊடகங்கள் கூட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிக்கு முக்கியத்துவம் தரவில்லை. இந்த முறை தொங்கு சட்டசபைதான் அமையும். 234 தொகுதிகளிலும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவோம்.

தமிழகம்
இரு கழகங்களின் அஸ்தமனத்திற்கு முடிவுரை எழுதி, தமிழகத்தில் சிறப்பான மாற்றம் காண மக்கள் நீதி மய்யம் கூட்டணி அதற்கான முன்னெடுப்பை நிகழ்த்தும் என மக்கள் நீதி மய்ய கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக, திமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம்.

வாக்குறுதி
கமல்ஹாசன் தொடங்கிய இந்த கட்சி நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி சட்டசபைத் தேர்தலிலும் மக்களுடன் மக்களாக இணைந்து குறைகளை கேட்டறிந்தன. அது போல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பொருளாதாரத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளன.

முந்தைய கருத்துக் கணிப்பு
இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் திமுகவே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளை அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பொய் என கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications