ஷாக்.. சென்னையில் சீறிவந்த ரயில்.. பதறி தண்டவாளத்தில் படுத்த முதியவர்! கடைசியில் ட்விஸ்ட்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லாவரத்தில் மின்சார ரயில் வேகமாக வந்த நிலையில் தண்டவாளத்தில் முதியவர்கள் ஒருவர் திடீரென்று படுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் மக்கள் பயன்பாட்டுக்காக மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று மாலையில் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.

Man escaped from moving train accident after lied down on track at Pallavaram in Chennai

பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்க சென்றது. ஆனால் பல்லாவரம் ரயில் நிலையத்தித்துக்கு முன்பே நடை மேம்பாலத்தின் கீழ் செல்லும் தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் சென்றார். பாய்ந்து வந்த ரயிலை பார்த்த அந்த நபர் திடீரென்று தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றார். ரயிலின் வேகத்தை அவர் குறைத்தார். ஆனால் ரயில் நிற்கவில்லை. முதியவர் தண்டவாளத்தில் படுத்து கிடந்த நிலையில் அவரை கடந்து சிறிது தூரம் சென்ற பிறகு ரயில் நின்றது.

Man escaped from moving train accident after lied down on track at Pallavaram in Chennai

இதையடுத்து ரயிலில் இருந்து என்ஜின் டிரைவர், பொதுமக்கள் அனைவரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது அந்த முதியவர் ரயிலுக்கு நடுவே தண்டவாளத்தில் படுத்து வெளியே வர முயன்று கொண்டிருந்தார். இதனால் மற்றவர்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறுகியதாக இருந்தது.

இதனால் லேசான காயமடைந்து இருந்தாலும் அந்த முதியவரால் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து மற்றவர்கள் அவருக்கு உதவி செய்தனர். இதையடுத்து அவர் ரயில் தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Man escaped from moving train accident after lied down on track at Pallavaram in Chennai

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருமழிசை பகுதியை சேர்ந்த ரவி (வயது 66) என்பதும், அவர் பல்லாவரம் வந்துவிட்டு ரயிலில் ஏறி புறப்பட்டு செல்ல முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+