மார்ச் 5-ம் தேதி திவாகரன் மகனுக்கு திருமணம்... அழைப்பிதழ் ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் நடைபெறவுள்ளதால், அதில் பங்கேற்பதற்காக சசிகலா பரோலில் வருகிறார்.

திசைமாறி பயணிக்கும் திவாகரனையும், தினகரனையும் திருமண வீட்டில் ஒன்றிணைத்து பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பார் சசிகலா எனக் கூறப்படுகிறது.

மேலும், பிரிந்து கிடக்கும் உறவுகளை ஒன்று சேர்க்க இந்த திருமணம் ஒரு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கு 2020 மார்ச் 5-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் திவாகரன். மேலும், திருமணத்துக்கான அழைப்பிதழும் தயாராகி வருகிறது.

பரோலில் சசி

பரோலில் சசி

ஜெய் ஆனந்த் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சசிகலா பரோலில் வர இருக்கிறார். அவ்வாறு அவர் வரும் போது பிணக்குகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் உறவுகள் ஒன்றுக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது வருகையை ஆளுங்கட்சி தரப்பு மிரட்சியோடு பார்க்கிறது.

டிடிவி தம்பி

டிடிவி தம்பி

திவாகரனுக்கு சம்பந்தி ஆகப்போவது வேறு யாருமில்லை, அக்கா மகனும் தினகரனின் உடன் பிறந்த தம்பியுமான பாஸ்கரன் தான். அவரது மகளைத் தான் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் மணம் முடிக்க உள்ளார். இருவரும் காதல் திருமணம் பிரிவது குறிப்பிடத்தக்கது.

நீலாங்கரை வீடு

நீலாங்கரை வீடு

கடந்த வாரம் சென்னை நீலாங்கரை வீட்டில் திவாகரன் மகனுக்கு நிச்சயத்தார்த்த விழா நடைபெற்றது. அதில் முக்கியமான குடும்ப உறவினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இதனிடையே நிச்சயதார்த்த விழாவின் சிறப்பு என்னவென்றால் மாப்பிள்ளைக்கு போட்டியாக மாமனாரும் (பாஸ்கரன்) இளமைத் தோற்றத்தில் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்து தோற்றமளித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+