இந்த வாரம் பாருங்க.. மன்னார்குடிக்கு குட் நியூஸ் சொன்ன டிஆர்பி ராஜா!.. நிஜமாவே மின்ன வச்சிடுவாரோ!
சென்னை: மன்னார்குடி மக்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் உதயம் ஆகக் கூடிய வாரமாக இந்த வாரம் அமையும் என முழுமனதோடு நம்புகிறேன் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி எம்எல்ஏவாக 3-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டவர் டிஆர்பி ராஜா. இவர் மின்னும் மன்னை என்ற திட்டத்தை செயல்படுத்த பாடுபட்டு வருகிறார். தற்போது திமுக ஆட்சி அமைந்த நிலையில் இந்தத் திட்டத்தை எப்பாடுப்பட்டாவது நிறைவேற்றுவேன் என துடித்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்க உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்கிறார்.

டெல்டா மாவட்டங்கள்
மன்னார்குடி டெல்டா மாவட்டங்களுள் முக்கியமான நகரமாகும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த மன்னார்குடி டெல்டா மாவட்டங்களில் 4ஆவது மிகப் பெரிய நகரமாகும். தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மன்னார்குடி உள்ளது. இந்த பகுதி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியுள்ளார்கள்.

சிறு குறு தொழில்கள்
தறி நெய்தல், உலோக தொழிற்சாலைகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. எனினும் இந்த நகரின் பெருவாரியான வருமானம் விவசாயத்தை முன்னிறுத்தியே உள்ளது. இங்கு நெல், பருத்தி, கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் விளைகின்றன. இங்கு பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லை. சிறு குறு தொழில்களே காணப்படுகின்றன.

மன்னை
இந்த நிலையில் நமது ஒன் இந்தியா தமிழுக்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இன்னும் சில காலத்தில் (அதாவது பட்ஜெட் கூட்டத் தொடர்) மன்னார்குடிக்கு மகத்தான திட்டங்களை கொண்டு வருவோம். அந்த வகையில் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றிக் கடனாக மன்னையை எப்படி மின்ன வைக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். இதை சவாலாகவே சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.

மன்னார்குடி மக்களுக்கு தடுப்பூசி
மன்னார்குடி மக்களுக்கு தடுப்பூசி, உணவுப் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் நாசுக்காக கேட்கிறார். இந்த நிலையில் விரைவில் மன்னார்குடிக்கு அற்புதமான திட்டங்கள் வரும் என ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், #மன்னார்குடி மக்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் உதயம் ஆகக்கூடிய வாரமாக இந்த வாரம் அமையும் என்று முழுமனதோடு நம்புகிறேன்.

நெட்டிசன்கள் கோரிக்கை
கழகத் #தலைவர் #முதலமைச்சர் அவர்கள் நல்லாசியுடன் மன்னையின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் என்று நம்புவோம். நமது மன்னை நிச்சயம் மின்னும். #மின்னும்_மன்னை #DmkGovt என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராஜா. இந்த ட்வீட்டுக்கு பிறகு ராஜாவிடம் அந்த நகரை சேர்ந்த நெட்டிசன்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

குப்பை கிடங்கை ஒழிக்கணும்
அதில் ஒருவர் மன்னார்குடி மக்களை நோயாளிகளாக்கும் குப்பைக் கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும். மழைக் காலங்களில் வரும் துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்கில் குப்பைகளை எரிக்கும் போது வரும் புகையால் குப்பை கிடங்கு சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார். அது போல் நிறைய பேர் மின்னும் மன்னை திட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். மேலும் பலர் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications