எழும்பூர் கோர்ட்டில் காத்து கிடக்கும் மன்சூரலிகான்.. முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க முதல் நபராக வந்தார்
முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க கோர்ட்டுக்கு வந்திருக்கிறார் மன்சூர் அலிகான்
Recommended Video

சென்னை: எழும்பூர் கோர்ட்டுக்கு சமூக ஆர்வலர் முகிலன் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக தனது ஆதரவை தெரிவிக்க முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்து காத்து கிடக்கிறார் நடிகர் மன்சூரலிகான்.
கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தனது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கூறியதாகவும், கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான சில உண்மைகளை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிக்க உள்ளதாகவும் முகிலன் கூறியிருந்தார்.
இதற்காக மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முகிலனை எழும்பூர் கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தும்படி நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டிருந்தார். முகிலன் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாலும், இதையடுத்து முக்கிய திருப்பங்கள் நிகழ கூடும் என்பதாலும், கோர்ட் வளாகமே பரபரத்து காணப்படுகிறது.

கோர்ட்
இந்நிலையில், நடிகர் மன்சூரலிகான் எழும்பூர் கோர்ட்டுக்கு வந்துள்ளார். இவர் ஏற்கனவே பலமுறை முகிலனுக்காக குரல் கொடுத்தவர். "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய முகிலன் தற்போது உயிரோடு உள்ளாரா? இல்லையா என்பது கூட தெரியவில்லை.

முழு பொறுப்பு
தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிக்கு காணாமல் போன ஒருவரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் அல்ல... எனவே அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே பொறுப்பு" என்று ஒருமுறை ஆவேசமாக கூறினார் மன்சூரலிகான்.

பதில் சொல்லணும்
அது மட்டுமில்லை, முகிலன் கிடைக்கும் வரை தேர்தலை நடத்த விடமாட்டேன் என்றும், முகிலன் கடத்தப்பட்ட விவகாரத்திற்கு காவல் ஆணையர் முதல் சென்னை கமிஷனர் வரை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் உரக்க சொன்னவர் மன்சூரலிகான்.

எழும்பூர் கோர்ட்
இன்று முகிலன் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராவதால், தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக காலையிலேயே கோர்ட்டுக்கு வந்து விட்டார் மன்சூர். ஏகப்பட்ட பரபரப்புக்கு மத்தியில், கோர்ட் வளாகத்தில் தாகத்துக்கு தண்ணீரை அருந்தி காத்து கிடக்கிறார் மன்சூர்!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications