அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டவில்லை.. மறுபடியும் பேசுவோம்.. மன்சூர் அலிகான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் இன்று பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களவை தேர்தலில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்குமாறும் அவர் கேட்டு வருகிறார். மேலும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Mansoor Ali Khan talks with AIADMK alliance

மக்களவைத் தேர்தலில் முதலில் ஆரணி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு அவர் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென தனது தொகுதியை வேலூருக்கு மாற்றிக் கொண்டார்.

எனவே வேலூர் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், முனுசாமி உள்ளிட்டோருடன் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், "அதிமுக அழைத்ததன் பேரில் இங்கு பேச்சுவார்த்தைக்கு வந்தோம். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே அதிமுகவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்" என்றார்.

தேசிய அரசியலில் குதித்த மன்சூர் அலிகான்.. கட்சி பெயர் மாற்றம்.. லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு!


மக்களவைத் தேர்தலில் முதலில் ஆரணி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு அவர் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென தனது தொகுதியை வேலூருக்கு மாற்றிக் கொண்டார்.

எனவே வேலூர் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், முனுசாமி உள்ளிட்டோருடன் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, தனக்கு ஒரு மக்களவை தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு அதிமுகவிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் அதிமுக கூட்டணிக்கு தான் எல்லா தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் மன்சூர் அலிகான் உறுதியளித்துள்ளார்.

நடிகரும் தமிழ் மண் ஆர்வலருமான மன்சூர் அலிகான் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திருச்சியில் லட்சிய திமுக சார்பில் போட்டியிட்டார்.

நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்த மன்சூர் அலிகான், அந்த கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து விலகி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த கட்சி சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி எம்பி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். இதற்காக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அண்மையில் திரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் சிக்கிய மன்சூர் அலிகான், அவ்வப்போது சமூக அவலங்களுக்கும் குரல் கொடுப்பார். சென்னை பெருவெள்ளம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தனது கருத்தை எடுத்துரைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+