சேரிப் புயல் திருமா.. அம்பானி- அதானியை விட்டு வைக்காத மன்சூர் அலிகான்.. மீண்டும் பரபரப்பு அறிக்கை
சென்னை: நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்த நிலையில் த்ரிஷா குறித்து பாலியல் ரீதியாக ஒரு கருத்தை பேசியிருந்தார். இது பெரும் பிரச்சினையாக மாறியது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதி ராஜா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்த நிலையில் அவரோ நான் மன்னிப்பு கேட்கும் ஜாதியா என்றெல்லாம் பேசினார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதை த்ரிஷாவும் ஏற்றார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது. இனி விவசாயிகள் நிலம் பறிக்கப்படாது. நிலக்கரி சுரங்கத்திற்கென நிலம் புதிதாக எடுக்கப்படாது. 1% N.L.C. மின்சாரம். தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 1018% கர்நாடகம் செலவழிக்கிறது. சர்வே ரிப்போர்ட்.. கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்ம்ம்......பி வழிகின்றன. தமிழக ஆறுகளின் அடி மட்ட மண் யாவும். கேரளா, கர்நாடகாவுக்கு டன், டன்னாய் லாரிகளில் விற்க்கப்படுகிறது. அழகான கடவுளின் மனம் குளிர்ந்தது.
தூத்துக்குடியில் 13 பேரை சுட்ட போலி...(லி) ஸார் கடவுள் தூக்கிலே போடும். காவிரி டெல்டா விவசாய மண் யாவும் மீற்கப்படும். நெடுவாசல் நிறைய சேரி மக்கள் போராடிக்கொண்டே இருக்க, அதானி துறைமுகங்களில், ஏர்போர்ட் வழியாக நித்தம் டன்டன்னாக தங்கமும், கோகனும் கடத்திவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்று உலகின் No 1. பணக்காரர்...அதானி, அம்பானி | நாம்... அம்பாளை கும்பிடும் ... வெறும் அம்பாநீ ..... உப்பு தின்றவன். தண்ணி குடிக்கனும். யாம் அனுப்பியது கடிதம் அல்ல. அறிக்கை!!
எமை ஆதரித்த யாவோரும் ... முதல் உதிர்த்த வார்த்தை மன்சூரலிகான் செய்த தவறு. எனவே இறையச்சத்தோடு வருந்த வேண்டும். முன்னுதாரணமாக திகழ.. வேண்டி. யாம் பத்திரிக்கைக்கு அனுப்பியது அறிக்கை. கடவுள் மனம் குளிர்ந்தது. 5 மாநிலத்தில் "கை" வெல்கிறது ஆறு மாதத்தில் "இ.ந்.தி.யா" வெல்கிறது.. Cast census மூலம் யாவோர்க்கும்.. வேலைவாய்ப்பு.. அழகிய கடவுளே பொதுச்சொத்தை அதானிக்கு விற்றவர்களை தண்டிப்பாயாக!. சேரிப் புயல் திருமா... ஆதித்தமிழன் சமூகநீதி நிலைநாட்டிய அயோத்திதாஸ பண்டிதர் புகழ் ஓங்குக .....பாம்பை.....? கண்டவனுக்கு மட்டுமல்ல... அனைவர்க்கும் தர்ஷனம் தருவாயாக...... அரோகரா! யாம் அனுப்பியது கடிதம் அல்ல! என்று இந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications