யாரை சந்திக்கச் சென்றாலும் வெறுங்கையுடன் செல்லாத மாரிமுத்து! பவானியிலிருந்து வந்த ஸ்பெஷல் பொருள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர், சக நடிகர்கள் உட்பட யாரை சந்திக்கச் சென்றாலும் வெறுங்கையுடன் செல்லாத பழக்கம் கொண்டவர் மறைந்த நடிகர் மாரிமுத்து.

யாரை சந்திக்கச் சென்றாலும் அவர்களுக்கு புத்தகமும், பொன்னாடையும் பரிசளிப்பது நடிகர் மாரிமுத்துவின் வழக்கம். ஆரம்பகாலங்களில் இருந்த வறுமை சூழலிலும் இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றியவர் நடிகர் மாரிமுத்து. இதற்காகவே கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி தனது வீட்டு அலமாறிகளை நிரப்பி வைத்திருப்பார்.

Marimuthu never goes empty-handed to whomever he goes to meet

அதேபோல் வெறுமனே அந்த புத்தகத்தை கையில் எடுத்துச் சென்று கொடுக்காமல் அதற்கென பிரத்யேக கிஃப்ட் காகிதப் பை ஒன்றையும் சொந்தமாக தனது பெயர் அச்சடித்து வாங்கி வைத்துக் கொள்வார் நடிகர் மாரிமுத்து. சுற்றுச்சூழலை பாதிக்காத இந்த காகித கிஃப்ட் பையை ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்று ஆர்டர் கொடுப்பார்.

இப்படி வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து. அதேபோல் புத்தகங்களோடு பொன்னாடையையும் கூடவே வாங்கிச் சென்று போர்த்தி தாம் பார்க்கச் சென்றவர்களை கவுரவிப்பார்.

அதேபோல் மூட் அவுட் ஆகிவிட்டால் வடிவேலு காமெடியை பார்த்து தன்னை புத்துணர்வு செய்துக் கொள்வார் நடிகர் மாரிமுத்து. நடிகர்களிலேயே வடிவேலுவுக்கு மட்டும் தான் மாரிமுத்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+