சென்னையின் முக்கிய இடம்.. களமிறக்கப்பட்ட 300 ஏஐ கேமரா! உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு மண்டலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் பணிகளுக்கு பின்பாக சென்னை காவல்துறை, மெரினா கடற்கரை பகுதியை உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு மண்டலமாக மாற்றி வருகிறது. அங்கு சுமார் 300 AI-திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவ முடிவு செய்து பாதி பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் மீதம் உள்ள இடங்களிலும் கேமராக்கள் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லேபர் சிலை முதல் சீனிவாசபுரம் வரை உள்ள 71 முக்கிய இடங்களில் இந்த கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படவுள்ளது. இதில் 280 4K அல்ட்ரா HD கேமராக்களும், முகம் மற்றும் வாகன அங்கீகார வசதியுடன் கூடிய 20 PTZ அலகுகளும் அடங்கும்.

marina

மெரினா காவல் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு சிறிய கட்டுப்பாட்டு மையம், இந்த நேரடி காட்சிகளை வேப்பேரியில் உள்ள ICCC-க்கு அனுப்பும். ICCC என்பது ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு ஆகும்.

இந்த முயற்சி பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதோடு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு அங்கே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும், திருட்டு சம்பவங்களை தடுக்கும். அதோடு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தடுக்கப்படும். சமீபத்தில்தான் மெரினா கடற்கரைடையின் ஒரு பகுதி blue flag அங்கீகாரம் பெற்றது. இதையடுத்து அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. . இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மற்ற கடற்கரைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த இது ஊக்கமளித்துள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மெரினா கடற்கரை நீச்சல் குளத்தை சுற்றி 30 ஏக்கர் பரப்பளவில் 40 மூங்கில் இருக்கைகள், 20 குடைகள், நான்கு கண்காணிப்பு கோபுரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய நான்கு குழந்தைகள் விளையாட்டு பகுதிகள், இரண்டு செல்ஃபி புள்ளிகள், கண்காணிப்புக்காக 20 கேமராக்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் 24 ஜோடி மூங்கில் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட பல வசதிகளை மாநகராட்சி ஏற்கனவே உருவாக்கியுள்ளது. மேலும் 40 அடி அகலம் மற்றும் 30 அடி உயரம் கொண்ட மூங்கில் வளைவு, தியான இடம் (30 அடிx30 அடி) மற்றும் வாசிப்பு இடம் (16 அடிx16 அடி), 30 சக்கர நாற்காலிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தூய்மை பணிகள்

மெரினா கடற்கரையின் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை உப்ராசர் நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இப்பணி அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 2.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில், தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பணியாளர்கள் கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

இப்பணியில் ஈடுபடும் 70 ஊழியர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பணியாற்றுவார்கள். அதே போல், மீதமுள்ள 30 பேர் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பணியில் ஈடுபடுவார்கள். மணற்பரப்பை சுத்தம் செய்ய டிராக்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெரினா கடற்கரையை சுத்தமாகவும், குப்பைகள் இல்லாமலும் பராமரிக்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலக்கொடி கடற்கரை

இது போக சென்னை மாநகராட்சி திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரையை நீலக்கொடி கடற்கரைகளாக மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இந்த திட்டம் ஒவ்வொரு கடற்கரையிலும் 10-20 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை பயன்படுத்துதல் (TN-SHORE) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஆகியவை இந்த திட்டத்திற்கான பகுதியை தேர்ந்தெடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+