கல்யாணம் ஆகிவிட்டதால் பிறந்த வீட்டில் இருந்து பெண்ணின் உரிமை பறிபோய் விடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் ஆகிவிட்டது என்பதாலேயே, பெற்றோர் வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் உரிமை பறிக்கப்பட்டு விடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு, ஜி.மாயக்கண்ணன், பி.சரண்யா ஆகியோர் விண்ணப்பித்தனர். அவர்களில் சரண்யாவுக்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜி.மாயக்கண்ணன், சரண்யா குறிப்பிட்ட பஞ்சாயத்தில் வசிப்பவர் அல்ல என்றும், தவறான தகவல் மூலம் பதவியைப் பெற்றுள்ளார் என்றும் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார்.

Marriage does not strip a woman of residential rights to her parents house, says Chennai high court

ஊராட்சி செயலாளர் பணி நியமனத்திற்கான நிபந்தனைகளில் ஒன்று, வேட்பாளர் உள்ளூர்வாசியாக இருக்க வேண்டும் என்பது. ஆனால், சரண்யா தனது திருமணத்திற்குப் பிறகு தனது வீட்டை தனது கணவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். எனவே அவரை தகுதியான வேட்பாளராகக் கருத முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி மஞ்சுளா தலைமையிலான பெஞ்ச், "சாதாரணமாக ஒரு திருமணமான பெண் தன் கணவனின் வீட்டில் வசித்தாலும், அவளது திருமணத்தின் காரணமாக பெற்றோரின் வீட்டில் வசிக்கும் உரிமையை மறுத்ததாகக் கருத முடியாது. திருமணத்திற்குப் பிறகு தனி ரேஷன் கார்டு பெறுவதற்காக, அவரது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு, கணவரின் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதை வைத்து மட்டும் ஒரு திருமணமான பெண் தன் பெற்றோரின் விசிப்பிடத்துடனான உறவைத் துண்டித்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அவருடைய பெற்றோர் வீட்டைப் பொறுத்தமட்டில் அவரது குடியிருப்பு நிலை ஒருமுறை மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. திருமண விதிகள் ஒரு பெண்ணுக்கு அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை." எனத் தெரிவித்துள்ளது.

Marriage does not strip a woman of residential rights to her parents house, says Chennai high court

மேலும், இன்றைய உலகில், ஆண்களும் பெண்களும் கல்வி அல்லது தொழில் நிமித்தம் பல இடங்களுக்குச் செல்கின்றனர், ஆனால் இன்னும் தங்கள் சொந்த இடத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கருதுகின்றனர். ஒரு பெண்ணின் விருப்பமே அவர அதற்குரிய குடியிருப்புச் சான்றிதழைப் பெற போதுமானது என்று நீதிமன்றம் கூறியது.

திருமணமான பெண் தன் சொந்த ஊரை முற்றிலுமாக கைவிட்டு, கணவனின் இடத்தையே தன் வசிப்பிடமாக கருதுகிறார் என்ற கருத்து உள்ளது. ஒரு திருமணமான பெண் தனது வேலை, வணிகம் அல்லது வேறு காரணங்களுக்காக தனது பிறந்த வீட்டிற்கும் திருமண வீட்டிற்கும் இடையில் எந்த இடத்தை வசிப்பிடமாக தேர்வு செய்தாலும், அவரது விருப்பத்தைப் பயன்படுத்துவதை எதுவும் தடுக்க முடியாது" என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+